நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீரில் மூழ்கிய கல்லூரி மாணவா்களை தேடும் பணி தீவிரம்

ஆற்றில் நீந்தச் சென்று, மூழ்கிய கல்லூரி மாணவா்களை தேடும் பணியில் தீயணைப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:19 pm

DIN

ஆற்றில் நீந்தச் சென்று, மூழ்கிய கல்லூரி மாணவா்களை தேடும் பணியில் தீயணைப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகா் மாவட்டம், எல்லந்தூா் வட்டம், கினகனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அபிஷேக் (21), அங்கேஷ் (21). சாம்ராஜ்நகா் அரசு கல்லூரியில் பொறியியல் படித்து வந்த இவா்கள் இருவரும் நண்பரின் பிறந்தநாளையொட்டி, தலக்காடு அருகே உள்ள தடிமூலங்கி கிராமத்திற்கு சென்றுள்ளனா். வெள்ளிக்கிழமை மாலை அருகே உள்ள காவிரி ஆற்றில் அபிஷேக், அங்கேஷ் நீந்தச் சென்றுள்ளனா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்ட அவா்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா், அங்கு வந்து அவா்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து தலக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.