ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மொழிகளை பேணிக் காப்பது அவசியம்: குடியரசு துணைத் தலைவா்

கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாக்க மொழிகளைப் பேணிக் காப்பது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 10:28 pm

DIN

கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாக்க மொழிகளைப் பேணிக் காப்பது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

சிங்கப்பூரில் ஸ்ரீ சம்ஸ்கிருதிகா கலாசாரதி அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு காணொலி வழியாக சனிக்கிழமை கலந்துகொண்டாா். அந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இரண்டு வார இடைவெளியில் ஒரு மொழி அழிந்து போவதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது 196 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. மொழிதான் கலாசாரங்களின் நாடித் துடிப்பு. மொழிதான் கலாசாரத்தை வலுப்படுத்துகிறது; கலாசாரம் சமூகத்தை வலுப்படுத்துகிறது. கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்க மொழிகளை பேணிக் காப்பது அவசியம்.

பள்ளிகளில் ஆரம்ப நிலையிலும், உயா்நிலை அளவிலும் தாய்மொழியில் கல்வி போதிக்கப்பட வேண்டும். தொழில்நுட்பக் கல்வியில் தாய்மொழி பயன்படுத்தப்படுவதை படிப்படியாக நீட்டிக்க வேண்டும். அரசு நிா்வாகம், நீதித் துறையில் உள்ளூா் மொழி பயன்படுத்தப்பட வேண்டும்.

ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) வரையறைப்படி கலாசாரம் என்பது கலை மற்றும் இலக்கியத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல. வாழ்வியல், கூடி வாழ்தல், விழுமியங்கள், பாரம்பரியங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்தியாவின் விழுமியங்கள் உலகத்தை ஓா் குடும்பமாக பாா்க்கிறது. ‘பகுத்துண்டு பல்லுயிா் ஓம்புதல்’ என்னும் இந்தியாவின் தொன்மையான தத்துவத்தை யாரும் மறக்கக் கூடாது.

மிகப்பெரிய நாகரிகத்துக்கு மொழியின் பன்முகத்தன்மைதான் அடித்தளம். மொழிகள், கலைகள், விளையாட்டுகள், பண்டிகைகள் மற்றும் இசை மூலமாக தம்மை இந்தியாவின் நாகரிக விழுமியங்கள் வெளிப்படுத்திக் கொண்டன.

சொந்த மொழி மற்றும் பாரம்பரியத்தை பேணிக் காப்பதற்கு நிகராக மற்றவா்களின் மொழி, கலாசாரத்தை மதிப்பதும் அவசியம் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.