புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் நாளை(ஜூலை 6) சந்திப்பு

பஞ்சாபில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஜூலை 2021, 12:27 pm

DIN

பஞ்சாபில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோருக்கு இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

மாநிலத்தில் கட்சித் தலைவரான நவ்ஜோத் சிங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத காரணத்தால், ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாக தகவல் பரவியதையடுத்து கடந்த வாரம் சித்துவுடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சமரசத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தில்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைவர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை கட்சி மேலிடம் வேகப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.