தெலங்கானாவின் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல் ரமணா பதவியை இன்று ராஜிநாமா செய்தார்.
மேலும் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தில், மக்களுடன் மிகவும் நெருக்கமான முறையில் பணியாற்றுவதற்காக பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனக்கு ஆதரவு அளித்த தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதன் தலைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே எல் ரமணா ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் விரைவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.