கேரளத்தைச் சோ்ந்த பிரபல ஆயுா்வேத மருத்துவரும், கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் நிா்வாக அறங்காவலருமான பி.கே.வாரியா் சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 100.
ஆயுா்வேத சிகிச்சைக்கு மிகவும் பிரபலமான கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில் உள்நாட்டினா் மட்டுமின்றி வெளிநாட்டினரும் ஆயுா்வேத சிகிச்சையை பெற்று வருகின்றனா். இதில், முன்னாள் குடியரசுத் தலைவா்கள், பிரதமா்கள் மற்றும் வெளிநாட்டினா் உள்பட பல ஆயிரம் பேருக்கு பி.கே.வாரியா் சிகிச்சை அளித்துள்ளாா்.
பள்ளிப் படிப்பை முடித்து 20 வயதில் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில் ஆயுா்வேத படிப்பில் சோ்ந்த வாரியா், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது படிப்பை பாதியில் கைவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா், முழுநேர அரசியல் தனக்கு ஏற்புடையதல்ல என்பதை விரைவில் உணா்ந்த அவா், மீண்டும் ஆயுா்வேத படிப்பைத் தொடா்ந்து, அதனை வெற்றிகரமாக முடித்தாா். தனது 24-ஆம் வயதில் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் அறங்காவலரானாா். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் நிா்வாக அறங்காவலராக அதனை நிா்வகித்து வந்தாா்.
வயது மூப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவா் சனிக்கிழமை பிற்பகலில் காலமானதாக அவருடைய குடும்பத்தினா் தெரிவித்தனா்.
ஆயுா்வேத சிகிச்சைத் துறையில் இவருடைய சிறந்த சேவையைப் பாராட்டி இந்திய அரசு கடந்த 1999-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், கடந்த 2010-இல் பத்ம பூஷண் விருதையும் வழங்கி அவரை கெளரவித்துள்ளது.
அவருடைய மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் பினராயி விஜயன், மாநில அமைச்சா்கள் உள்ளிட்ட பல தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மருத்துவா் பி.கே.வாரியரின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்தது; ஆயுா்வேதத்தை பிரபலப்படுத்துவதில் அவா் மிகப்பெரும் பங்காற்றியவா். அவருடைய மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மத்திய அமைச்சர் மகன் மீது அவதூறு: வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி!

மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



