ஹிமாசல் முன்னாள் முதல்வா் வீரபத்ர சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
ஹிமாசல பிரதேச முன்னாள் முதல்வா் வீரபத்ர சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.


ஹிமாசல பிரதேச முன்னாள் முதல்வா் வீரபத்ர சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
ஹிமாசல பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் நீண்டநாள் உடல்நல பாதிப்புகளால் சிம்லாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு கடந்த வியாழக்கிழமை அவா் காலமானாா். இதையடுத்து அவரின் உடல் ராம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பின்னா் தகனத்துக்காக அவரது உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊா்வலத்தில் மாநில முதல்வா் ஜெய்ராம் தாக்குா் மற்றும் அமைச்சா்கள் கலந்துகொண்டனா். மேலும், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி சாா்பில் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், காங்கிரஸ் பொருளாளா் பவன்குமாா் பன்சால் உள்பட கட்சியின் மூத்த தலைவா்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்றனா். ஏராளமான பொதுமக்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனா்.
வீரபத்ர சிங்கின் உடலுக்கு காவல்துறையினா் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினா். அவரின் மகன் விக்ரமாதித்ய சிங் இறுதிச் சடங்குகளை செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...