கேரளத்தில் குழந்தை உள்பட மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ்
கேரளத்தில் குழந்தை உள்பட மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


கேரளத்தில் குழந்தை உள்பட மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், 22 மாதக் குழந்தை, 45 வயது முதியர் மற்றும் 29 வயது சுகாதாரப் பணியாளர் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் மொத்தம் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
இரண்டு பகுதிகளாக பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 27 மாதிரிகளில் 26 மாதிரிகள் நெகட்டிவ் என வந்துள்ளன. அதேபோல் மூன்றாவது பகுதியாக ஞாயிற்றுக்கிழமை எட்டு மாதிரிகள் அனுப்பட்டதில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும், ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரிவிலும் பரிசோதனை வசதிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
கரோனா தொற்று பரவலும், ஜிகா தீநுண்மி பரவலும் அதிகரித்து வருவதால், கேரளத்துக்கு உதவுவதற்காக மத்திய நிபுணா் குழு மாநிலத்துக்கு விரைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...