தாராவியில் தடுப்பூசி செலுத்தும் பணி: நன்கொடைக்கு வரவேற்பு

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் வரும் 2-3 மாதங்களில் 100% தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த 2-3 மாதங்களில் தாராவியில் 100% தடுப்பூசி செலுத்தும் பணி
அடுத்த 2-3 மாதங்களில் தாராவியில் 100% தடுப்பூசி செலுத்தும் பணி
Published on
Updated on
1 min read


மும்பை: நாடு முழுவதும் இதுவரை 38 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து முடிந்துள்ள நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் வரும் 2-3 மாதங்களில் 100% தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சிவ சேனை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் ஷேவாலே கூறுகையில், வரும் 2 - 3 மாதங்களில் தாராவில் உள்ள 100 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் முதல்கட்டமாக 10,000 தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்துள்ளோம். மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டமாக 30,000 கரோனா தடுப்பூசிகளை முன்பதிவு செய்யவிருக்கிறோம்.

இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த, நன்கொடையாளர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com