மும்பை: நாடு முழுவதும் இதுவரை 38 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து முடிந்துள்ள நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் வரும் 2-3 மாதங்களில் 100% தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து சிவ சேனை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் ஷேவாலே கூறுகையில், வரும் 2 - 3 மாதங்களில் தாராவில் உள்ள 100 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் முதல்கட்டமாக 10,000 தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்துள்ளோம். மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டமாக 30,000 கரோனா தடுப்பூசிகளை முன்பதிவு செய்யவிருக்கிறோம்.
இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த, நன்கொடையாளர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.