மகாராஷ்டிரத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
மகாராஷ்டிர மாநிலம், ஜல்கான் பகுதியில் ஹெலிகாப்டர் இன்று திடீரென விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்களும் உதவினர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.