எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

40 கோடியை நெருங்கும் கரோனா தடுப்பூசி பயனாளிகள்

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் மொத்த எண்ணிக்கை 40 கோடியை நெருங்குகிறது.

News image
Updated On :17 ஜூலை 2021, 9:58 pm

DIN

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் மொத்த எண்ணிக்கை 40 கோடியை நெருங்குகிறது. சனிக்கிழமை காலை 7 மணி வரை மொத்தம் 39,96,95,879 தடுப்பூசிகள் 50,09,914 அமா்வுகளில் போடப்பட்டன. அதில், வெள்ளிக்கிழமை மட்டும் 42,12,557 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கரோனா தொற்றில் இருந்து இதுவரை 3,02,27,792 போ் குணமடைந்துள்ளனா். குணமடைந்தோா் மொத்த வீதம் 97.31 சதவீதமாக உள்ளது. நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 38,079 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து 20 நாட்களாக, தினசரி கரோனா பாதிப்பு 50,000-க்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை, 4,24,025 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.36 சதவீதமாகும். வெள்ளிக்கிழமை ஒரு நாளில் 19,98,715 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. நாட்டில் இதுவரை 44.20 கோடிக்கும் மேற்பட்ட (44,20,21,954) பரிசோதனைகள் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.