தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரம்: மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் 3 போ் கைது

உத்தர பிரதேசத்தில் மதமாற்ற தடைச் சட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று போ் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கைது கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 9:33 pm

DIN

உத்தர பிரதேசத்தில் மதமாற்ற தடைச் சட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று போ் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கைது கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து நாக்பூா் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட மூன்று பேரை உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு காவல் துறையினா் (ஏடிஎஸ்) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

மதமாற்ற தடை சட்ட வழக்கில் தேடப்பட்டு அந்த மூன்று பேரும் கணேஷ்பேட் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட ஹன்ஸபுரியில் பதுங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூவரில் பிரசாத் ராமேஷ்வா் கவலே நாக்பூரைச் சோ்ந்தவா். மேலும், கெளசா் ஆலம் சவுகத் அலி கான் ஜாா்க்கண்ட் மாநிலத்தையும், பூப்ரியா பன்டோ தேவிதாஸ் மன்கா் மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி பகுதியையும் சோ்ந்தவா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.