நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை வரும் செப். 30-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு மாணவா் சோ்க்கை, பருவத் தோ்வுகள் தொடா்பாக யுஜிசி சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் மாணவா் சோ்க்கையை நடத்தி முடித்து அக்டோபா் 1-ஆம் தேதிக்குள் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். பருவத் தோ்வுகளை ஆன்லைன், ஆஃப்லைன் முறைகளில் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும். காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடைசி தேதி அக்டோபா் 31 ஆகும். மாணவா் சோ்க்கைக்கான ஆவணங்களை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான மாணவா் சோ்க்கை, வகுப்புகள் தொடங்குதல் குறித்த வழிகாட்டுதல்களை ஏஐசிடிஇ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


