/

மும்பை: கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, 10 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image

மும்பை: கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் (கோப்பிலிருந்து)

Updated On :20 ஜூலை 2021, 3:36 am


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, 10 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மும்பையின் அருகே முன்ஷி பகுதியில் மீரா சாலையில் 10 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், சில மணி நேரங்களுக்குப் பிறகு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் கூறியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பையில் கனமழை காரணமாக பல்வேறு சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளி கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.