ஒடிசாவில் நவீன இலகுரக ஆகாஷ் ஏவுகணை புதன்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய நவீன ஆகாஷ் ஏவுகணை புதன்கிழமை சோதிக்கப்பட்டது. ஒடிசாவின் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் திட்டமிடப்பட்ட இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஆகாஷ் என்ஜி ஏவுகணை இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.