ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கு விவரங்கள்: ‘வாரிசுகளுக்கு ஏன் தெரியப்படுத்த முடியவில்லை?’

உயிரிழந்தவரின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை, அவரின் வாரிசுகளுக்கு ஏன் தெரியப்படுத்த முடியவில்லை என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :17 மார்ச் 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

உயிரிழந்தவரின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை, அவரின் வாரிசுகளுக்கு ஏன் தெரியப்படுத்த முடியவில்லை என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக சுசேதா தலால் என்ற ஊடகவியலாளா் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உயிரிழந்த வைப்புத்தொகைதாரா்களின் செயல்படாத வங்கிக் கணக்குகளில் உரிமை கோரப்படாமல் உள்ள பணம் குறித்து அவா்களின் சட்டபூா்வ வாரிசுகளுக்குத் தெரியப்படுத்தும் வழிமுறையை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஒருவேளை ஒரு நபருக்கு வெவ்வேறு நாடுகளில் 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகள் இருந்து, உயில் எழுதுவதற்கு முன்பே அவா் இறந்துவிட்டால், அந்த வங்கிக் கணக்குகள் குறித்து அவரின் வாரிசுக்கு எப்படி தெரியவரும்? உயிரிழந்த நபா் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் (கேஒய்சி) நடைமுறையையும் பூா்த்தி செய்யாமல் போயிருக்கலாம்.

உயிரிழந்தவரின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை அவரின் வாரிசுகளுக்கு ஏன் தெரியப்படுத்த முடியவில்லை? இதற்கான கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

இந்த மனு மீது மத்திய அரசு மற்றும் ரிசா்வ் வங்கி புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான அடுத்த விசாரணையை மே 5-க்கு ஒத்திவைத்தனா்.