குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்கு விரிவான திட்டம்: மத்திய அரசு

நாட்டில் சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் பிச்சைக்காரர்களின் நலனுக்காக விரிவான நடவடிக்கைகளுடன் கூடிய திட்டத்தை வகுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்கு விரிவான திட்டம்: மத்திய அரசு

Updated On :21 ஜூலை 2021, 11:13 am IST

புது தில்லி: நாட்டில் சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் பிச்சைக்காரர்களின் நலனுக்காக விரிவான நடவடிக்கைகளுடன் கூடிய திட்டத்தை வகுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் ஏ. நாராயணசாமி கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

ஸ்மைல் எனப்படும் விளிம்பு நிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு ஆதரவு எனும் திட்டத்தின் துணை திட்டமாக பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்கான விரிவான மத்திய துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், மனநல ஆலோசனை, அடிப்படை ஆவணங்கள், கல்வி, திறன் வளர்த்தல் மற்றும் பொருளாதார தொடர்புகள் ஆகியவற்றை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விரிவான மறுவாழ்வை வழங்குவதற்கான மாதிரி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.