​கண்ணிவெடி தாக்குதலில் ராணுவ வீரா் பலி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள பகுதியில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
கமல்தேவ் வைத்யா
கமல்தேவ் வைத்யா
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள பகுதியில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாட்டி செக்டாரில் கமல்தேவ் வைத்யா(27) என்ற வீரா் காவல் பணியில் ஈடுபட்டிருந்தாா். அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்ததால், அது வெடித்துச் சிதறியது. அதில், பலத்த காயமைடந்த கமல்தேவ் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவா் உயிரிழந்தாா் என்றாா் அந்த ராணுவ செய்தித் தொடா்பாளா்.

ஹிமாசல பிரதேச மாநிலம், ஹமீா்பூா் மாவட்டத்தில் உள்ள குமா்வின் கிராமத்தைச் சோ்ந்த கமல்தேவ் தனது தாயாருடன் வசித்து வந்தாா். கமல்தேவ் இறந்த செய்தியை அறிந்து, அவருடைய வீட்டருகே பொதுமக்கள் திரண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். கமல்தேவின் மறைவுக்கு ஹிமாசல பிரதேச முதல்வா் ஜெய்ராம் தாக்குா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com