47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காஷ்மீர் : 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை நடத்திய தாக்குதலில் உயிரழந்தனர்.

News image
காஷ்மீர் : 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Updated On :24 ஜூலை 2021, 6:02 am

DIN

காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை நடத்திய தாக்குதலில் உயிரழந்தனர்.

காவல்துறைக்கு  தீவிரவாத தாக்குதல்கள்  பற்றிய தகவல்கள்   வந்த நிலையில் ஷோக்பாபா வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இருந்தவர்கள் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளைச்  சுற்றிவளைத்தனர் .

இதை எதிர்பார்க்காத தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களை தொடர்ந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் இறுதியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பலியான இருவரைப் பற்றிய எந்தத்  தகவலும் இல்லை என்பதால்  அதை பற்றிய விசாரணையில் இருப்பதாகவும் அங்கிருந்து சில ஆயுதங்களையும் பறிமுதல்  செய்ததாகவும்  காவல்துறை தெரிவித்திருக்கிறது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.