இந்தியா
உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று அதிகாலை 1.28 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று அதிகாலை 1.28 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
நிலநடுக்கத்தின் போது பதிவான ரிக்டர் அளவுகோல் 3.4 எனவும் , அதன் மையப்பகுதி கிழக்கு உத்தரகாசியில் இருந்து 23 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிலநடுக்கத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
கடந்த வாரம் உத்தரகண்டின் பித்தோகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.