ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் கோபுரத்திற்கு ரூ.32 கோடி செலவில் தங்க முலாம் பூச முடிவு

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் கோபுரத்திற்கு 32 கோடி ரூபாய் செலவில் தங்க முலாம் பூச திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

News image
Updated On :25 ஜூலை 2021, 9:39 am

DIN

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் கோபுரத்திற்கு 32 கோடி ரூபாய் செலவில் தங்க முலாம் பூச திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

கோயில் கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் பணி வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. 2022 மே மாதத்திற்குள் இந்த பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 100 கிலோ தங்கம் செலவழிக்கப்பட உள்ளது. 

முன்னதாக, ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் தங்க முலாம் பூசும் திட்டம் குறித்து விவாதிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கே. எஸ். ஜவஹர் ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேவஸ்தான அர்ச்சகர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர் , 

திருமலையில் உள்ள ஸ்ரீ பூவரா சுவாமி கோயில், திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் ஆகிய கோயில்களின் கோபுரங்களுக்கு தங்க முலாம் பூச 2019 செப்டம்பரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.