எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பெகாஸஸை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? - ராகுல் சரமாரி கேள்வி

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
ராகுல் காந்தி
Updated On :28 ஜூலை 2021, 9:49 am

DIN

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெகாஸஸ் மென்பொருள் விவகாரம் உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவரும் நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்திய நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர் அமளி ஏற்பட்டுவருகிறது. இதனிடையே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அனைத்து எதிர்க்கட்சிகளும் இங்கு கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எங்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக பயன்படுத்த பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என்ற கேள்வியைதான் தொடர்ந்து கேட்கிறோம்.

இதுகுறித்து விவாதம் நடைபெறாது என அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதம் நடத்தப்படக்கூடாது? மோடி எங்களின் தொலைப்பேசிகளில் ஆயுதத்தை புகுத்தி வேவு பார்த்துள்ளார்.

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் நாங்கள் தடுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், நாங்கள், எங்களின் கடமைகளையே செய்கிறோம். அவர்களின் குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு எதிரானது" என்றார்.

பின்னர் பேசிய சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், "நாட்டின் பாதுகாப்பு, ஜனநாயகம், விவசாயிகளின் நலன் ஆகியவற்றை காப்பாற்ற ஒன்றிணைந்துள்ளோம். ராகுல் காந்தி விளக்கியது போல், ஜனநாயகத்திற்கு எதிரான அம்புதான் இந்த ஆயுதம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.