ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மம்தாவுடன் பேசியது என்ன? கனிமொழி ட்வீட்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து உரையாடியதாக திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

News image
Updated On :29 ஜூலை 2021, 12:47 pm

DIN


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து உரையாடியதாக திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். இதன் பகுதியாக கனிமொழியை வியாழக்கிழமை சந்தித்தார் மம்தா பானர்ஜி.

இந்த சந்திப்பு குறித்து கனிமொழி ட்வீட் செய்தது:

"மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை சந்தித்துப்பேசியது மகிழ்வளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடினோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.