மம்தாவுடன் பேசியது என்ன? கனிமொழி ட்வீட்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து உரையாடியதாக திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து உரையாடியதாக திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். இதன் பகுதியாக கனிமொழியை வியாழக்கிழமை சந்தித்தார் மம்தா பானர்ஜி.
இந்த சந்திப்பு குறித்து கனிமொழி ட்வீட் செய்தது:
"மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை சந்தித்துப்பேசியது மகிழ்வளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.
ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடினோம்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...