மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்று இளைஞர் தற்கொலை

கேரள மாநிலத்தில் பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்று இளைஞர் தற்கொலை
Updated On :31 ஜூலை 2021, 6:24 am

DIN


கேரள மாநிலத்தில் பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள கோத்தமங்கலம் அருகே நெல்லிக்குழி என்ற பகுதியில், வெள்ளிக்கிழமையன்று பல் மருத்துவம் பயின்று வந்த மாணவியை, 24 வயது நபர் சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பலியான மாணவி மானசா (24) என்பதும், கொலையாளி ராகில் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மானசா, கோத்தமங்கலத்தில் உள்ள இந்திரா காந்தி கல்லூரியில் பல் மருத்துவம் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இருவரும் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, இந்திரா காந்தி பல் மருத்துவக் கல்லூரிக்கு அருகே நடந்துள்ளது. இருவருக்கும் இடையே இருந்த தனிப்பட்ட விரோதமே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவி, கல்லூரிக்கு அருகே ஒரு வீட்டில் பணம் கொடுத்து தங்கும் விருந்தாளியாக தங்கியிருந்த நிலையில், நேற்று அந்த வீட்டுக்குள் நுழைந்த நபர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முன்னதாக, தனது மகளை தொந்தரவு செய்வதாக, மானசாவின் பெற்றோர் ஏற்கனவே ராகில் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.