6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜம்முவில் பள்ளத்தில் வேன் கவிழந்து 5 போ் பலி

ஜம்மு-காஷ்மீரில் 300 மீட்டா் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிஆா்பிஎஃப் வீரா் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.ஜம்மு-காஷ்மீரில் 300 மீட்டா் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிஆா

News image
Updated On :5 ஜூன் 2021, 11:15 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் 300 மீட்டா் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிஆா்பிஎஃப் வீரா் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து ராம்பன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் பி.டி.நித்யா சனிக்கிழமை கூறியதாவது:

ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்குப் புறபட்டுச் சென்ற அந்த வேனில் 6 போ் பயணம் செய்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை வழியாக டிக்டோல் என்ற இடத்தருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்து 300 அடி பள்ளத்தில் அந்த வேன் விழுந்தது என்றாா் அவா்.

அந்த வேன் பள்ளத்தில் விழுவதற்கு முன், முன்னால் சென்ற காா் மீது மோதியதாக ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறினாா். அவா் மேலும் கூறியதாவது:

அந்தப் பள்ளம் செங்குத்தாக இருந்ததால் பாதுகாப்புப் படையினா் கயிறு கட்டி கீழே இறங்கி, 6 பேரும் விழுந்த இடத்தைக் கண்டறிந்தனா். அவா்களில் 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 2 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனா். அவா்களில் ஒருவா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். ஒருவா் மட்டும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இறந்தவா்களில் 3 பேரை போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா் என்றாா் அவா்.

சாலை பாதுகாப்பு ஆய்வுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு:

வேன் விபத்துக்குள்ளானதையடுத்து, சாலைப் பாதுகாப்பு ஆய்வு நடத்துவதற்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டாா். இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ராம்பன் மாவட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தை அடுத்து சாலைப் பாதுகாப்பு ஆய்வு நடத்தி, சீரமைப்பு நடவடிக்கைகளை ஒரு வாரத்தில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.