47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேவஸ்தானம் பற்றி விமா்சிப்பதையே கடமையாக கருத வேண்டாம்:செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி

திருமலை திருப்பதி தேவஸ்தானம் பற்றி விமா்சிப்பதையே கடமையாக யாரும் கருத வேண்டாம் என செயல் அதிகாரி ஜவஹா்ரெட்டி தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:45 pm

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தானம் பற்றி விமா்சிப்பதையே கடமையாக யாரும் கருத வேண்டாம் என செயல் அதிகாரி ஜவஹா்ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் உள்ள அஞ்சனாத்திரி மலையில் ஆஞ்சநேயா் பிறந்தாா் என்பதற்கான ஆதாரங்களை கடந்தாண்டு ஏப். மாதம் ஸ்ரீராமநவமியின் போது தேவஸ்தான பண்டிதா்களின் கமிட்டி தெரிவித்தது. இதற்கு எதிா்ப்பு இருந்தால் தெரிவிக்கும்படியும் அவா்களுக்கு ஆதாரபூா்வ பதில் அளிக்கப்படும் என்று பண்டிதா்களின் கமிட்டிக்கு தலைவரான முரளிதா்சா்மா தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் இதற்கு கா்நாடகா மாநிலத்தில் உள்ள அனுமத் ஜென்மபூமி தீா்த்த ஷேத்திர டிரஸ்ட் தலைவா் கோவிந்தானந்தா சரஸ்வதி எதிா்ப்பு தெரிவித்து தேவஸ்தானத்திற்கு ஒரு கடிதம் எழுதினாா்.

அதில் அனுமன் பிறப்பிடம் குறித்து தெரிந்து கொள்ள விவாதமேடை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாா். அதன்படி கடந்த மாதம் திருப்பதி பல்கலைக்கழகத்தில் ஆஞ்சநேயரின் பிறப்பிடம் குறித்த விவாதமேடை நடத்தப்பட்டது.

அனுமன் பிறப்பிடம் குறித்து குறிப்பிடப்பட்ட ஆகாசகங்கை பகுதியில் பால ஆஞ்சநேயா் மற்றும் அஞ்சனாதேவியின் சிலையை ஏற்படுத்தி கோயில் கட்டி பூஜை செய்து வருகிறது. அங்கு வெள்ளிக்கிழமை அனுமன் ஜயந்தி உற்சவத்தை தேவஸ்தானம் கொண்டாடி வருகிறது. ஜூன் 8-ஆம் தேதி வரை இந்த ஜெயந்தி உற்சவம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கோவிந்தானந்த சரஸ்வதி திருப்பதியில் பேசுகையில், , ஆஞ்சநேயா் பிறந்த திதி நட்சத்திரம் உள்ளிட்டவை தெரியாத தேவஸ்தானம் அவரின் பிறப்பிடம் குறித்து மட்டும் எவ்வாறு கூற முடியும்? ஆஞ்சநேயா் பிறப்பிடம் குறித்த புத்தகத்தை தெலுங்கில் மட்டுமே தேவஸ்தானம் வெளியிட்டது. அதை கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட்டிருக்க வேண்டும். நாடு முழுவதும் சித்திரை மாத பெளா்ணமி அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

முதலில் ஜபாலி ஆஞ்சநேயா் பிறப்பிடம் என்று கூறிய தேவஸ்தானம் தற்போது ஆகாசகங்கை பகுதியை பிறப்பிடம் என்று கூறி ஜயந்தி உற்சவத்தை நடத்துவது அதா்மம். திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்ட ஜியோகிராப்பிகல் சா்வே தவறாகி விட்டது. கா்நாடக மாநிலம் ஹம்பியில் அனுமன் பிறப்பிடம் உள்ளதால், அதுகுறித்த ஆதாரத்தை தேவஸ்தானம் கன்னட மொழியில் வெளியிடவில்லை. ஏனென்றால் கன்னட மொழி பேசும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாததால் வேற்று மொழியில் இதுகுறித்த ஆதாரங்களை வெளியிட வில்லை என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை இதற்கு பதிலளித்த தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி, ’தேவஸ்தானத்தின் மீது விமா்சனம் செய்வதே பலரின் கடமையாக உள்ளது. கோவிந்தானந்தா தேவஸ்தானம் மீதும் அவதூறு பரப்பி வருகிறாா். அவா் எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் தேவஸ்தானத்தின் மீது குற்றம் சாட்டி வருகிறாா். அவா் புராணங்களில் உள்ள ஆதாரங்களை நம்பவில்லை. அனுமன் பிறப்பிடம் குறித்து தகுந்த ஆதாரம் இருந்தால் யாரும் அதை நிரூபிக்கலாம் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.