எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தலைமை கேட்டுக்கொண்டால் ராஜிநாமா: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

​கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வேன் என கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :6 ஜூன் 2021, 9:30 am

DIN


கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வேன் என கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி எடியூரப்பா தெரிவித்தது:

"கட்சி மேலிடத்துக்கு என் மீது நம்பிக்கை இருக்கும் வரை நான் முதல்வராகத் தொடர்வேன். அவர்கள் எப்போது கூறுகிறார்களோ அன்றைய தினம் நான் முதல்வர் பதவியிலிருந்து விலகி ராஜிநாமா செய்வேன். மாநிலத்தின் நலனுக்காக என்னை முழுவதும் அர்ப்பணிப்பேன். என்னுடைய நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கட்சித் தலைமை எனக்கு வாய்ப்பளித்துள்ளது. அதைப் பயன்படுத்தி என்னால் முடிந்தவற்றைச் செய்வேன். மற்றவை மத்தியத் தலைமையின் கைகளில் உள்ளன.

நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் எப்போதும் மாற்று இருக்கும். கர்நாடகத்தில் மாற்று இல்லை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மத்தியத் தலைமைக்கு என் மீது நம்பிக்கை உள்ளவரை நான் முதல்வராகத் தொடர்வேன்" என்றார் எடியூரப்பா.

கர்நாடகத்தில் தலைமை மாற்றம் குறித்து பேச்சுகள் எழுந்து வரும் நிலையில் முதன்முறையாக இதுதொடர்பாக முதல்வர் எடியூரப்பா மௌனம் கலைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.