சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரோனா நோயாளிகளுக்கு தலைசீவி, முகச்சவரம் செய்யும் முன்களப் பணியாளர்கள்

கரோனா நோயாளிகளுக்கு, தலைவாரி, முகச்சவரம் செய்யும் மருத்துவப் பணியாளர்களின் சேவை நெஞ்சை நெகிழ வைக்கிறது.

News image
கரோனா நோயாளிகளுக்கு தலைசீவி, முகச்சவரம் செய்யும் முன்களப் பணியாளர்கள்
Updated On :8 ஜூன் 2021, 5:37 am

ANI


ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகளுக்கு, தலைவாரி, முகச்சவரம் செய்யும் மருத்துவப் பணியாளர்களின் சேவை நெஞ்சை நெகிழ வைக்கிறது.

பிரஹம்பூரில் உள்ள எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தங்களது அன்றாட மருத்துவப் பணிகளையும் தாண்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்தும் மருத்துவ முன்களப் பணியாளர்கள் தங்களது பணிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் எடுக்கப்பட்ட விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், கரோனா நோயாளிகளின் தலையை வாரிவிடுவதும், வயதான கரோனா நோயாளிகளுக்கு வாஞ்சையோடு முகச்சவரம் செய்யும் முன்களப் பணியாளர்களின் சேவை அனைவரின் மனங்களையும் வென்று வருகிறது.

இவர்களது பணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்து குவிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.