எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எடியூரப்பா சிறப்பாகவே பணியாற்றுகிறார்: கர்நாடக பாஜக மேலிடப் பொறுப்பாளர்

கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா சிறப்பாகவே பணியாற்றி வருவதாக பாஜக தேசியப் பொதுச்செயலரும், கர்நாடக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான அருண் சிங் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :10 ஜூன் 2021, 9:01 am

DIN


கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா சிறப்பாகவே பணியாற்றி வருவதாக பாஜக தேசியப் பொதுச்செயலரும், கர்நாடக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான அருண் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் தலைமை மாற்றம் குறித்து கடந்த சில நாள்களாகவே பேச்சுகள் இருந்து வந்தன. அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க பாஜகவில் திரைமறைவு வேலைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இதனிடையே, பாஜக தலைமைக்கு நம்பிக்கை இருக்கும் வரை முதல்வர் பதவியில் தொடர்வேன் என முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது கர்நாடகத்தில் பரபரப்பானது.

இதைத் தொடர்ந்து, எடியூரப்பாவை மாற்றுவது பற்றி எவ்வித விவாதமும் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கர்நாடக பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் எடியூரப்பா சிறப்பாகவே பணியாற்றி வருவதாக அருண் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடக பாஜக தலைமை மாற்று குறித்து தெரிவித்தது:

"அப்படி எதுவும் இல்லை. எடியூரப்பாதான் முதல்வர். அவர் சிறப்பாகவே பணியாற்றுகிறார். அவர் முதல்வராகத் தொடர்வார். அமைச்சர்களுடன் இணைந்து கரோனா தொடர்பாக அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்."

பாஜக மாநிலத் தலைவர் மாற்றப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்தது:

"இது வதந்தி. இதுபோன்ற வதந்திகள் பரப்பக் கூடாது. கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவரின் கீழ் கட்சியின் பணிகள் சிறப்பாகவே நடக்கின்றன. களத்தில் சிறப்பாகவே செயலாற்றி வருகிறோம். கட்சியில் மாற்றம் எதுவும் இல்லை, அது வெறும் கற்பனையே" என்றார் அருண் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.