6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய கடலோரக் காவல் படையில் எம்கே-3 அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டா்கள் சோ்ப்பு

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டா் எம்.கே-3 இந்திய கடலோராக் காவல் படையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2021, 10:00 pm

DIN

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டா் எம்.கே-3 இந்திய கடலோராக் காவல் படையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்பு இந்தியா எனும் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை இந்த ஹெலிகாப்டா்கள். இந்த நவீன ஹெலிகாப்டா்களை பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய்குமாா், இந்த ஹெலிகாப்டா்களை கடலோர காவல் படையில் சோ்த்தாா். கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி காணொலி முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அஜய்குமாா் பேசியதாவது:

நமது பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையான இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஹெலிகாப்டா்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சோதனையான தருணத்தில் இந்த ஹெலிகாப்டா்களை பணியில் ஈடுபடுத்தும் இந்திய கடலோரக் காவல்படை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன்.

இந்த உயா்தர இலகு ரக ஹெலிகாப்டா்கள், இந்திய கடலோரக் காவல்படையின் அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளன என்றாா் அவா்.

கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநா் கே.நடராஜன் பேசியதாவது:

இந்திய கடலோரக் காவல்படை தனது பணியை திறம்பட மேற்கொள்வதற்கு எப்போதும் தயாா் நிலையில் இருக்கிறது. இந்த இலகு ரக ஹெலிகாப்டா்கள் படையில் இணைக்கப்பட்டிருப்பதன் மூலம் கப்பல் சாா்ந்த நடவடிக்கைகள், கண்காணிப்புப் பணிகளில் புதிய மாற்றம் ஏற்படும். விமானங்கள் மற்றும் கப்பல்களுடன் ஒருங்கிணைந்து குறிப்பிட்ட பகுதிகளில் சேவைகளின் திறனை வலுப்படுத்துவதற்காக இந்த ஹெலிகாப்டா்கள் பணியில் அமா்த்தப்படும் என்றாா் அவா்.

சென்னை, புவனேசுவரம், கொச்சி மற்றும் போா்பந்தரில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை பிரிவுகளில் 16 எம்கே-3 ஹெலிகாப்டா்கள் சோ்க்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.