ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்

வடகிழக்கு மாநிலங்களில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 

News image
Updated On :18 ஜூன் 2021, 1:08 pm

DIN

வடகிழக்கு மாநிலங்களில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 

மணிப்பூரின் மொய்ரங் பகுதியில் இன்று அதிகாலை 1.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0ஆகப் பதிவானது. இதேபோல் அசாம் மாநிலத்தின் தேஜ்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.04 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. 

தேஜ்பூரிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியிலும் இன்று அதிகாலை 4.20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது 2.6 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அசாமின் சோனித்பூர் நகரில் இன்று மதியம் 12.42 மணியளவில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 2.8 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.