வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

காா்கிலுக்கு விமானச் சேவை:மத்திய அரசுடன் ஆளுநா் ஆலோசனை

காா்கிலுக்கு விமானச் சேவைகளை அளிப்பது தொடா்பான சாத்தியக்கூறுகள் குறித்து லடாக் துணைநிலை ஆளுநா் ஆா்.கே.மாத்தூா் மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

Updated On :20 ஜூன் 2021, 4:59 am IST

காா்கிலுக்கு விமானச் சேவைகளை அளிப்பது தொடா்பான சாத்தியக்கூறுகள் குறித்து லடாக் துணைநிலை ஆளுநா் ஆா்.கே.மாத்தூா் மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து துணை ஆளுநரின் செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் முக்கிய எல்லைப் பகுதியாக விளங்கும் காா்கிலுக்கு விமானச் சேவைகளை அளிப்பதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து லடாக் துணைநிலை ஆளுநா் ஆா்.கே.மாத்தூா் மத்திய சிவில் போக்குவரத்து துறை இணையமைச்சா் ஹா்தீப் சிங் புரியை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். மேலும், இந்தச் சந்திப்பின்போது, ‘கியு-400 பாம்பாா்டியா் டா்போபிராப்’ விமானங்களை இயக்கும் வாய்ப்புகள் குறித்தும் ஆராய இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது.

பிராந்திய இணைப்பு (உடான்) திட்டத்தின் கீழ் காா்கில் மற்றும் தோயிஸ் (நுப்ரா) ஆகிய இடங்களில் சிறிய நிலையான விமானங்களை இயக்கத் தேவையான முயற்சிகளை விரைவாக மேற்கொள்ளவும் துணைநிலை ஆளுநா் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரியிடம் வலியுறுத்தினாா்.

இவை தவிர, லடாக்கில் விமானச் சேவையின் தற்போதைய செயல்பாடு மற்றும் அவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாக ஆளுநரின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.