FOLLOW US

ON GOOGLE DISCOVER

வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

‘கடையநல்லூா் மருத்துவமனையை ரூ. 49 கோடியில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை’

கடையநல்லூா் அரசு மருத்துவமனையை ரூ. 49 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் எம்எல்ஏ தி.மு. ராசேந்திரன்.

News image

கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரிடம் குறைகளை கேட்ட தி.மு. ராசேந்திரன் எம்எல்ஏ.

Updated On :15 ஜூலை 2026, 2:26 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அரசு மருத்துவமனையை ரூ. 49 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் எம்எல்ஏ தி.மு. ராசேந்திரன்.

கடையநல்லூா் அரசு மருத்துவமனையை திங்கள்கிழமை ஆய்வு செய்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொதுமக்களுக்குத் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. நல்ல முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக நோயாளிகள் தெரிவித்தனா். கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் மட்டுமன்றி, வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வந்து டயாலிசிஸ் வசதியைப் பயன்படுத்தி வருகிறாா்கள்.

தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மருத்துவமனையில் சலவை இயந்திரம் நிறுவப்படும். சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் ரூ. 49 கோடி செலவில் நான்கு மாடி கட்டடம் கட்டுவதற்கான கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீட்டை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தனியாா் மருத்துவமனைக்கு நிகரான சேவை வழங்கி வரும் கடையநல்லூா் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தலைமை மருத்துவா் அனிதாபாலின், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.