பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரோனா 3-வது அலைக்குத் தயாராக இருக்க வேண்டும்: ராகுல்

கரோனா 3-வது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :22 ஜூன் 2021, 6:31 am

DIN


கரோனா 3-வது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். 

சுட்டுரையில் காணொலி மூலமாக செய்தியாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, கரோனா மூன்றாவது அலை கட்டாயம் வரும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். 

கரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடந்த கால தவறுகளை மத்திய அரசு மீண்டும் செய்தால் கரோனா பாதிப்பு மீண்டும் தொடரும்.

மாநிலங்களுக்கு இடையே எந்தவித வேறுபாடும் காட்டாமல், அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

கரோனா இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. அவற்றை தவிர்த்திருக்க முடியும். அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருந்தது. அவற்றிற்கு வழி செய்ய வேண்டும். பிரதமரின் கண்ணீர் மக்களின் உயிரைக் காக்காது  என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.