கோவேக்சின் போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு போவதில் சிக்கல்: மம்தா

கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)

கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

கோவேக்சின் தடுப்பூசியை சில வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதால், வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கு விரைவில் முடிவு காணும் வகையில் சுகாதாரத் துறை செயலருக்கு கடிதம் எழுத தலைமைச் செயலருக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். 

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கோவேக்சின் தடுப்பூசி குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com