வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் விவசாயிகள் பெரு நிறுவனங்களை சாா்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தச் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்பது அவா்களின் கோரிக்கையாக உள்ள நிலையில், அவா்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவாா்த்தைகளை மத்திய அரசு நடத்தியுள்ளது. எனினும் அவற்றில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவா்களின் போராட்டம் சனிக்கிழமையுடன் 7 மாதங்களை எட்டியது.