உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ச்சியாக பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:
"எதிர்வரும் உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடப்போவதாக செய்தித் தொலைக்காட்சி ஒன்று நேற்று முதல் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தவறானது, துளியும் உண்மையில்லாதது. பகுஜன் சமாஜ் கட்சி இதை மறுக்கிறது.
பஞ்சாப் தவிர்த்து உத்தரப் பிரதேச, உத்தரகண்ட் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடுகிறது என்பதையும் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்த கட்சி விரும்புகிறது."
இந்த குழப்பத்தைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான சதீஷ் சந்திரா மிஸ்ரா ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் குறித்த செய்திகளை வெளியிடும் முன் மிஸ்ராவைக் கலந்தாலோசித்து வெளியிடுமாறும் மாயாவதி கேட்டுக்கொண்டுள்ளார்.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் வரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


