ஒடிசாவில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், 11 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தில் அங்குல், போலாங்கீர், பாலாசோர், பாத்ராக், தென்கனல், கன்சம், ஜஜ்பூர், ஜர்சுங்குடா, கெந்த்ராபரா, கோரபுட் மற்றும் சோனிபூர் ஆகிய மாவட்டங்களில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கரோனா மூன்றாவது அலைக்கு முன்பாக மாநிலத்திலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 21-ம் தேதி முதல் ஒடிசாவில் ஒரு நாளுக்கு 3 லட்சத்திற்கும் குறையாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. எனினும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், செவ்வாய்க் கிழமை 1.18 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே சுகாதாரத் துறையால் செலுத்த முடிந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று (ஜூன் 30) காலை 38,380 குப்பி தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருந்தன. அவை மக்களுக்கு செலுத்தப்பட்டன.
மாநிலத்திற்கான அடுத்தக் கட்டத் தடுப்பூசி ஜூலை 2-ம் தேதி கிடைக்கும் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


