சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குலாம் நபி ஆசாத் உருவ பொம்மையை எரித்த காங்கிரஸ் தொண்டர்கள்

பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி பேசியதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உருவ பொம்மையை எரித்து ஜம்முவில் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

News image
Updated On :2 மார்ச் 2021, 12:01 pm

DIN


பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி பேசியதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உருவ பொம்மையை எரித்து ஜம்முவில் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஷநவாஸ் சௌதரி கூறியது:

"குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரஸ் நிறைய செய்துள்ளது. காங்கிரஸ்தான் அவரை ஜம்மு காஷ்மீர் முதல்வராக ஆக்கியது. அவர் கட்சிக்குத் திருப்பி பணியாற்ற வேண்டிய நேரத்தில் சொந்த கட்சிக்கு ஆதரவு தராமல் காங்கிரஸை வலுவிழக்கச் செய்கிறார்" என்றார் அவர்.

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் துணைத் தலைவர் எய்ஜாஸ் சௌதரி கூறியது:

"எங்களது மாநில உரிமையைப் பறித்த பிரதமர் நரேந்திர மோடியை குலாம் நபி ஆசாத் பாராட்டியுள்ளார். இவரைப் போன்றவர்கள்தான் காங்கிரஸ் வலுவிழப்பதற்குக் காரணமாக உள்ளனர். தனது அரசியல் அனுபவம் மூலம் கட்சியை மீட்டெடுக்க அவர் வழிநடத்த வேண்டுமே தவிர வலுவிழக்கச் செய்யக் கூடாது" என்றார்.

மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெற்ற குலாம் நபி ஆசாத்தைக் கௌரவிக்கும் விதமாக ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி-23 தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பிரதமரைப் பாராட்டும் விதமாக ஆசாத் பேசினார். ஆசாத்தின் இந்தப் பேச்சுக்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜி-23 தலைவர்களுக்கே ஆசாத்தின் கருத்தில் விருப்பமில்லை எனத் தகவல்கள் வெளியாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.