2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ராஜஸ்தானில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி: பி.எஸ்.எஃப். வீரர் பலி, நால்வர் காயம்

ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் பி.எஸ்.எஃப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

News image
ராஜஸ்தானில் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி: பி.எஸ்.எஃப் வீரர் பலி, நால்வர் காயம்
Updated On :3 மார்ச் 2021, 9:40 am

PTI

ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் பி.எஸ்.எஃப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். 

செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெய்சால்மரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்) வீரர்கள் ஐந்து பேர் மீது குண்டு பாய்ந்துள்ளது. 

இந்நிலையில் 3 பேர் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் போக்ரானில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சதீஷ்குமார் (32) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும், இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் குடும்பத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.