
ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சாதாவிற்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
உலகம் முழுவதும் கரோனா தோற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சாதாவிற்கு வியாழக்கிழமை கரோனா தோற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.