குஜராத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தவும் அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், குஜராத்தின் முக்கிய நான்கு நகரங்களான ஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் ஆகியவை, முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களது வழிகாட்டுதலில் மாநகராட்சி நிர்வாகங்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் போடப்படும் நிலையில், இதனை மூன்று லட்சமாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முகக்கவசத்தையும், சமூக இடைவெளியையும் கட்டாயமாக்க உள்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஆமதாபாத்தில் இன்று முதல் அடுத்த உத்தரவு வரும் வரை உயிரியல் பூங்காங்கள், ஏரிகள், பூங்காக்கள் ஆகியவை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இரவு நேர ஊரடங்கு நேரத்தை மேலும் இரண்டு மணி நேரம் அதிகரித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இரவு நேர ஊரடங்கு 12 மணி முதல் காலை 6 மணி வரை இருந்தது. இதனை இரவு 10 மணி முதல் 6 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரவு ஊரடங்கு மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.
அதுபோல, குஜராத் மாநிலத்துக்கு வெளி மாநிலங்களிலிருந்து வருவோர், கட்டயமாக 7 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


