நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அலகாபாத்: மசூதிகளில் இரவில் ஒலிபெருக்கிகளுக்குத் தடை

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2021, 8:49 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை தலைவர் கே.பி.சிங் வலியுறுத்தியுள்ளார்.

அலகாபாத் பல்கலைக் கழக துணைவேந்தர் அளித்த புகாரின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை சிறப்பு கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றையும் காவல்துறை தலைவர் எழுதியுள்ளார்.

அதில் அலகாபாத் உள்ளிட்ட 4 அண்டை மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.