எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிகாரில் ஏப். 5 வரை மருத்துவர்களுக்கு விடுப்பு இல்லை

கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பிகாரில் ஏப்ரல் 5-ம் தேதி வரை மருத்துவர்களின் விடுப்புகளை ரத்து செய்து அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2021, 6:46 am

DIN


கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பிகாரில் ஏப்ரல் 5-ம் தேதி வரை மருத்துவர்களின் விடுப்புகளை ரத்து செய்து அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பிகாரிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதனால் பிகாரில் ஏப்ரல் 5-ம் தேதி வரை மருத்துவர்களின் விடுமுறையை அம்மாநில சுகாதாரத் துறை ரத்து செய்துள்ளது.

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 107 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்க்கை 406-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பிகாரில் 1,555 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 39,726 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டில் பதிவான அதிகப்படியான கரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.