ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிப். 17-ல் மன்சுக் ஹிரேனை சந்தித்த சச்சின் வஜே: காட்டிக் கொடுத்த சிசிடிவி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு, பிப்ரவரி 17-ஆம் தேதி உயிரிழந்த மன்சுக் ஹிரேனை, காவல்துறை அதிகாரி சச்சின் வஜே 10 நி

News image
பிப். 17-ல் மன்சுக் ஹிரேனை சந்தித்த சச்சின் வஜே: காட்டிக் கொடுத்த சிசிடிவி
Updated On :19 மார்ச் 2021, 7:34 am

DIN

மும்பை: தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு, பிப்ரவரி 17-ஆம் தேதி உயிரிழந்த மன்சுக் ஹிரேனை, காவல்துறை அதிகாரி சச்சின் வஜே 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசிய சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளது.

மேலும், சச்சின் வஜே பயன்படுத்தி வந்த விலை மதிப்புமிக்க இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு வாகனம் சிவசேனை நிர்வாகி விஜயகுமார் கன்பத் என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்டது, அந்த வழக்கு தொடா்பாக காவல்துறை அதிகாரி சச்சின் வஜே கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு ஏற்படுத்திய சர்ச்சையால் மும்பை காவல்துறை ஆணையா் பரம்வீா் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி குடியிருப்பு அருகே வெடிபொருள்களில் நிரப்பப்படும் 20 ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்ட காரை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்தக் காா் ஹிரேன் மன்சுக் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. கடந்த 5-ஆம் தேதி ஹிரேன் மன்சுக் மா்மமான முறையில் உயிரிழந்தாா். அந்தக் காரை மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வஜே சில காலம் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில், சச்சின் வஜேவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா். இந்த வழக்கு சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மும்பை காவல்துறை ஆணையா் பரம்வீா் சிங் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். அவா் ஊா்க்காவல் படை டிஜிபியாக பணியமா்த்தப்பட்ட நிலையில், புதிய காவல் ஆணையராக ஹேமந்த் நாக்ரேல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பரம்வீா் சிங்கும், சச்சின் வஜேவும் தங்கள் போக்கில் நடந்துகொண்டு பணம் பறிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.