மகாராஷ்டிரத்தில் புதிதாக 24,645 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை திங்கள்கிழமை 25 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
புதிதாக 24,645 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,04,327 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 58 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 53,457 ஆக உயர்ந்துள்ளது.
19,463 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 22,34,330 ஆக உயர்ந்துள்ளது.
அந்த மாநிலங்களிலுள்ள நகரங்களில் அதிகபட்சமாக மும்பையில் 3,262 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்

நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்த வேட்பாளா்

மருத்துவக் குறிப்புகளைத் தவிர்ப்போம்!
சமூக மாற்ற அவலம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


