ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உ.பி.யில் நீதி கிடைப்பது கடினம் என்ற நிலையே உள்ளது: ஹத்ராஸ் சம்பவம் குறித்து மாயாவதி

ஹத்ராஸ் பாலியல் சம்பவத்துக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினர் நீதியைப் பெற பல சிரமங்களை எதிர்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

News image

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி (கோப்புப்படம்)

Updated On :22 மார்ச் 2021, 10:28 am

ஹத்ராஸ் பாலியல் சம்பவத்துக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினர் நீதியைப் பெறுவதில் தொடர்ந்து பல சிரமங்களை எதிர்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில் 19 வயது தலித் இளம்பெண், கடந்த செப்டம்பா் மாதம் 14-ஆம் தேதி 4 நபா்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்தப் பெண் தில்லி மருத்துவமனையில் அதே மாதம் 29-ஆம் தேதி உயிரிழந்தாா். 

இந்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். நால்வர் மீதும் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி,

உ.பி.யில் மிகவும் சோகமான மற்றும் வெட்கக்கேடான ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் நீதியைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறது.

ஆனால் நீதிமன்ற விசாரணையில் வெளிவந்த புதிய உண்மைகள் அரசின் மோசமான செயல்பாடு குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. 

வழக்கில் சாட்சிகளை அச்சுறுத்துவது தொடர்பான விவகாரத்தை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, உபி அரசு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்று மக்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உ.பி.யில் நீதி கிடைப்பது கடினம் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. அது தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.