எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முதல்கட்டத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் பிற்பகல் 3 மணிநிலவரப்படி 55.27% வாக்குகள் பதிவு

மேற்கு வங்கத்தின் முதல்கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணிநிலவரப்படி 55.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

News image
Updated On :27 மார்ச் 2021, 10:59 am

DIN

மேற்கு வங்கத்தின் முதல்கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணிநிலவரப்படி 55.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் புருலியா, ஜாா்கிராம், பாங்குரா, கிழக்கு மிதுனபுரி, மேற்கு மிதுனபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
அதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 3 மணிநிலவரப்படி 55.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் கட்ட தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தலா 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 
காங்கிரஸ்-இடதுசாரி-ஐஎஸ்எஃப் கூட்டணி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தோ்தலுக்காக, 10,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 36 லட்சம் பெண் வாக்காளா்கள் உள்பட மொத்தம் 73.80 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். பாதுகாப்பு பணியில் 684 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்களைத் தவிர மாநில காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். 
இந்தத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இருப்பினும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் புதிதாக வளா்ந்துள்ள பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.