புது தில்லி: ஜம்மு காஷ்மீரில், 2021-ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஊடுருவல் 25 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் 2020-ஆம் ஆண்டில் 167 காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாதத்தில் இணைந்த நிலையில், இதுவரை 20 பேர் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர்.
மத்திய பாதுகாப்பு அமைப்புகள் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, இந்த ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை ஜம்மு - காஷ்மீரில் 43 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும், இதே காலக்கட்டத்தில் 2020-ல் 58 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 6 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், 9 இளைஞர்கள் மாயமான நிலையில், அவர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் சில நாள்களில் அவர்கள் மீண்டும் வீடு திரும்பிவிட்டதாகவும், இந்த ஆண்டில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 20 இளைஞர்களில் 8 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


