டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனாவுக்கு பெற்றோரை இழந்த பிள்ளைகள்; உறவினர்களிடம் சேர்த்த தில்லி போலீஸ்

கரோனாவின் கோரத் தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாமல் அவதிப்படும் மக்களுக்கு தில்லி காவல்துறை தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறது.

News image
கரோனாவுக்கு பெற்றோரை இழந்த பிள்ளைகள்; உறவினர்களிடம் சேர்த்த தில்லி போலீஸ்
Updated On :1 மே 2021, 6:05 am

DIN

புது தில்லி: கரோனாவின் கோரத் தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாமல் அவதிப்படும் மக்களுக்கு தில்லி காவல்துறை தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறது.

உணவு தேவைப்படுவோருக்கு உணவளித்தல், ஆக்ஸிஜன் தேவையை விரைவாக பூர்த்தி செய்தல், கரோனாவால்  உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வது போன்ற பல பணிகளில் தில்லி காவல்துறை செய்து வருகிறது.

தற்போது அதையும் தாண்டி, கரோனாவுக்கு பெற்றோரை இழந்த சகோதரி, சகோதரனை அவர்களது உறவினர்களிடம் சேர்ப்பித்துள்ளனர்.

இது குறித்து தில்லி காவல்துறை உதவி ஆணையர் அதுல் குமார் தாகூர் கூறுகையில், சிஆர் பார்க் பகுதியில் இருந்த இரண்டு பேர் குறித்து எங்களுக்குத்  தகவல் கிடைக்கப் பெற்றது. அவர்களது பெற்றோர் கரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.

சஞ்சீவ் புகென் (53) ஏப்ரல் 28ஆம் தேதி கரோனாவுக்கு பலியாக, அவரது மனைவி மோமி (45) ஏப்ரல் 29ல் உயிரிழந்தார். அவர்களது பிள்ளைகள் சன்மிதா (20), அர்னாப் (18) ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

அவர்களது நண்பர்கள் மூலம் காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலில், பெற்றோரை இழந்து விரக்தியில் இருக்கும் இருவரும் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் விரைந்துச் சென்று அவர்களை மீட்டனர். அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இருவரும் சாப்பிட 3 அல்லது 4 நாள்களாக எதுவும் இல்லாமல் பட்டினியில் இருந்துள்ளனர்.

உடனடியாக அவர்களுக்கு உணவு மற்றும் பழச்சாறுகள் வழங்கப்பட்டு உடல்நலன் மீண்டும், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவர்களது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, இவர்களை பராமரிக்குமாறு கூறி உறவினர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.