இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் சுஷில் சந்திரா ஆலோசனை

தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று ஆலோசனை நடத்தினார்.

News image
5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் சுஷில் சந்திரா ஆலோசனை
Updated On :1 மே 2021, 10:25 am

DIN


சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

Story image

இதற்கான முன்னேற்பாடுகளை, அந்தந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இன்று காணொலி காட்சி வாயிலாக வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்ளிட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, மாநிலங்களில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.